
வெளிநாடு செல்லும்போது தடுப்பூசி சான்றிதழ் கேட்கப்படுவதுபோல், வருங்காலத்தில் இன்னும் பல இடங்களில் கேட்கப்படலாம் என்பதால் மக்கள் தடுப்பூசி செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.
புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் முயற்சியாக இன்று ஒரு நாள் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

