
ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் மேகவெடிப்பு காரணமாக, ஒரே நாளில் 213 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டு, ஆத்தூர் தடுப்பணை நிரம்பியது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சேலம், ஏற்காடு, பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் ஒரே நாளில் 100 மி.மீ.க்கும் கூடுதலாக மழை பெய்து வந்தது. ஏற்காட்டில் அவ்வப்போது, கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 11-ம் தேதி 56.8 மி.மீ. மழை பெய்தபோது, மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 17-ம் தேதி மேட்டூரில் ஒரே நாளில் 92.2 மி.மீ. மழை பெய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

