
கேரள எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களைக் கண்காணிப்பது சவாலாக உள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவை அச்சுறுத்தி வந்த நிபா வைரஸ், தற்போது மீண்டும் அம்மாநிலத்தில் பரவத் தொடங்கியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (செப்.05) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே கரோனா வைரஸால் மிகப்பெரும் பாதிப்பை கேரளா சந்தித்துள்ள நிலையில், நிபா வைரஸின் தாக்கம் தென்படத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நிபா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, கேரள அரசுக்கு உதவுவதற்காக சிறப்புக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

