
புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அக்டோபர் 4-ல் நடக்கிறது. இப்பதவியைக் கைப்பற்றப்போவது பாஜகவா, என்.ஆர்.காங்கிரஸா என்பது விரைவில் தெரியவரும்.
யூனியன் பிரதேசமான புதுவையில் இரு எம்.பி.க்கள் உள்ளனர். மக்களால் தேர்வான மக்களவை உறுப்பினராக காங்கிரஸைச் சேர்ந்த வைத்திலிங்கம் உள்ளார். மக்களால் தேர்வாகும் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார். இவரின் பதவிக் காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

