
வர்த்தகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் சனி, ஞாயிறுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் மளிகைக் கடைகள் இயங்க மாவட்ட ஆட்சியர் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள வர்த்தகப் பகுதிகளில் சனி, ஞாயிறுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

