
முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று கூறி வயதானவர்களை திமுக ஏமாற்றி ஓட்டு வாங்கியது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று (செப்.23) நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரணியம், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர் மாநகரம்), வேலழகன் (புறநகர்) மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

