
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் கழுவுகிற மீனில் நழுவும் மீன் நானல்ல, நாங்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் நேற்று முன்தினம் (செப்.19) நூலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை குறித்து ஏற்கெனவே பணியாற்றிய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய ஆளுநர் ரவியிடம் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. மேலும், கடிதம் வாயிலாகக் குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்" எனச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

