
நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகளைப் போட்டிருப்பேன். தமிழக மக்கள் நலனே முக்கியம் என்பதால் நாங்கள் அதைச் செய்யவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நகரச் செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.வீரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

