
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் மாலை முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று மாலை நிறைவு பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

