
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து புதுச்சேரி நகரப் பகுதியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள், கட்-அவுட் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கும் வருகின்ற அக். 21, 25, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

