
மாநிலங்களவை எம்.பி. தேர்தல் மனுத்தாக்கல் நாளை நிறைவடைகிறது. பாஜகவுக்கு இந்த இடம் உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் புது நிபந்தனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவடைகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் மாநிலங்களவை எம்.பி.யைப் பெறுவதில் போட்டி நிலவியது. அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

