
ஒரத்தநாடு அருகே 6 ஏக்கர் நெல் அறுவடை செய்யப்படாமலேயே மக்கிப் போனதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சிலர், இன்று (24-ம் தேதி) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆட்சியர் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட உயரதிகாரிகளும், நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.புகழேந்தி தலைமையில் விவசாயிகள் 15-க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியபடி கூட்ட அரங்குக்கு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

