
புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் செல்வகணபதியின் மனு இன்று ஏற்கப்பட்டது. சுயேச்சைகளின் 5 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
புதுவை மாநிலங்களவைத் தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. பாஜக சார்பில் முன்னாள் எம்எல்ஏ செல்வகணபதி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரைத் தவிர சுயேச்சைகளாக பத்மராஜன், ஸ்ரீராமச்சந்திரன், ஆனந்த், ஜார்ஜ் அகஸ்டின் உள்ளிட்டோர் 5 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். பாஜக வேட்பாளர் செல்வகணபதி மூன்று மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். மொத்தமாக 8 மனுக்கள் பெறப்பட்டிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

