
கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.2.39 கோடி மோசடியில் ஈடுபட்ட சுசி ஈமு ஃபார்ம்ஸ் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் எம்.எஸ்.குரு என்கிற எம்.குருசாமி (40). இவர், கடந்த 2010-ம் ஆண்டு பெருந்துறையில் 'சுசி ஈமு ஃபார்ம்ஸ் இந்தியா' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, கவர்ச்சிகரமான இரண்டு திட்டங்களை விளம்பரப்படுத்தினார். முதல் திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழிக் குஞ்சுகளை அளித்து, தீவனம், கொட்டகை அமைத்துக் கொடுத்து, பராமரிப்புத் தொகையாக 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம், ஆண்டு போனஸாக ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும். இரண்டு ஆண்டுகள் கழித்து, கட்டிய முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

