
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

