
சிறைக் கைதிகள் பயிற்சி பெற்றுத் தயாரித்த வண்ணமயமான விநாயகர் சிலைகள் புதுச்சேரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரூ.150 முதல் ரூ.1000 வரை இந்தச் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள சிறைக் கைதிகளுக்கு புதுச்சேரி அரவிந்தர் சொசைட்டி தொண்டு நிறுவனம் மூலம் மறுவாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

