
தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கீழவாசல் சரபோஜி சந்தையில் கட்டப்பட்ட கடைகள் இன்று (23-ம் தேதி) ஏலம் விடப்பட்ட நிலையில், மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் ஒரு விண்ணப்பம்கூட இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் கீழவாசலில் சரபோஜி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை மளிகை வியாபாரம், நாட்டு மருந்துக் கடைகள், காய்கறிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடைகள் இருந்தன. இங்கிருந்த 350 கடைகளையும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. இதில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

