
தனியார் ஹோட்டல்களில் அரசு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை மீறி ஆர்டிஐ மனுக்களைக் கையாள அதிகாரிகளுக்கு ரூ.3.5 லட்சம் செலவில் தனியார் ரிசார்ட்டில் மூன்று நாள் பயிற்சி நடத்தியது பற்றி ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல் மூலம் ஆளுநர், முதல்வருக்கு புகார் தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு நகர மற்றும் கிராம அமைப்புத் துறை சார்பில், அரசுக் கோப்புகளைக் கையாள்வது மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பெறப்படும் மனுக்களை எந்தெந்த முறைகளில் கையாள்வது என்பது குறித்து 62 அரசு ஊழியர்களுக்குத் தனியார் ரிசார்ட்டில் மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

