
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்கள் ஜப்பானைச் சேர்ந்த ஓ.கே.ஐ. (OKI) என்ற நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த இயந்திரத்தின் சென்சார் 20 விநாடிகள் மட்டும் பணத்தை சோதனை செய்யும். நாம் பணம் எடுக்கும்போது, இந்த சென்சாரை கை அல்லது வேறு ஏதேனும் பொருளை வைத்து மறைத்தால் அப்போது எடுக்கப்படும் பணத்தை அவை கணக்கில் கொள்ளாது. நாம் பணம் எடுத்த பின்னரும், நமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறையாது. ஏடிஎம் இயந்திரத்தின் இந்தக் குறையைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் 14 மாநிலங்களில் ஒரு கும்பல் சுமார் 5 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

