
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம் என்று புதுச்சேரி மாநில பாஜக அறிவித்துள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வரும் அக். 21,25,28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

