
ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே, திமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் மீது குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

