
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை, பணி நியமனம் அனைத்தும் வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும், இந்த வழக்கின் விவரத்தை இந்தச் சட்டத்தால் பலன் அடைந்தவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (எம்.பி.சி) 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

