
கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் ஆக.9-ம் தேதி முதல் தவறாமல் பணிக்கு வரவேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று அச்சம் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள், பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன. முன்னதாகக் கடந்த மாதத்தில் கரோனா நோய்ப் பரவல் தணிந்த நிலையில் கல்லூரிகளைத் திறப்பது தொடர்பாக உயர் கல்வித்துறை ஆலோசனை செய்தது. கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

