
இணைய வழியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரவர்களின் வீடுகளில் இருந்தே கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக் கூடத்தைக் காணலாம். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் அறிவியல்சார் சிந்தனையைத் தாய்மொழியில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனமான டி.ஒய்.ஏ.யு (DYAU) இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணையவழிக் கருத்தரங்கு மற்றும் இணையவழியில் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிடும் நிகழ்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

