
திருச்சி உறையூர் லிங்கம் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில், விற்பனைக்கு இருந்த ஃபார்மலின் தடவப்பட்ட மற்றும் கெட்டுப்போன 650 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
உணவுப் பாதுகாப்புத் துறையின் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு மற்றும் திருச்சி மீன்வளத்துறை துணை இயக்குநர் ஆர்.சர்மிளா, உதவி இயக்குநர் ரம்யலட்சுமி ஆகியோர் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இன்று லிங்கம் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

