
கரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவுக்குத் தடை விதிக்கப்பட்டதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் பூட்டிய கோயில் வாசல்களில் நின்று பக்தர்கள் சாமியை வழிபட்டனர்.
ஆடி மாதம் 18-ம் நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று அழைக்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கப்படும் பணிகள் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரியில் நீராடி, மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம், சமர்ப்பித்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்நாளில் புதுமணத் தம்பதிகள் ஆற்று நீரில் நீராடி, புதுமணப் பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். அதேபோல, விவசாயிகளும் ஆடிப்பெருக்கு நாளில் தங்களது உழவுப் பணிகளைத் தொடங்குவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

