
சிபிஎஸ்இ 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த 20 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள், இன்று (ஆகஸ்ட் 3-ம் தேதி) வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் முறை அறிவிக்கப்பட்டது. அதில், பிளஸ் 2 மாணவர்களுக்குக் கடந்த 30-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், மொத்தம் 99.37% பேர் தேர்ச்சி பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

