
அங்கன்வாடி மையங்களிலேயே சூடான மதிய உணவு வழங்கப்படும், அங்கன்வாடிப்‌ பணியாளர்கள்‌ கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், நகப்பூச்சு போட்டிருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட ஏராளமான வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட உள்ளதை அடுத்து, அங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைச் சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

