
பட்டாச்சாரியர்கள், அர்ச்சகர்கள் என யாரையும் கோயில்களில் இருந்து வெளியேற்றவில்லை என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சீர்கெட்டு சிதலமடைந்த அறநிலையத்துறையைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டத்தின் கீழ், சமீபத்தில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால், சில கோயில்களில் ஏற்கெனவே இருந்த பட்டாச்சாரியர்கள், அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

