
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள், மின்சாரத் திருத்தச் சட்டம், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்தும், அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் காரைக்காலில் இன்று (ஆக.9) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்தியத் தொழிற்சங்க மையம் ஆகியவற்றின் சார்பில், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கச் செயலாளர் ஏ.பழனிவேல் தலைமை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

