
இந்தியாவிலேயே முதல் முறையாக அணையின் பழைய கொள்ளளவை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையைத் தூர்வார தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 90 அடி. மொத்த நீர்ப்பரப்பு 113.76 ஹெக்டேர். மழைக் காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படும்போது வண்டல் மண் அடித்து வரப்பட்டதால் அணையின் நீர்மட்ட உயரம் வெகுவாகக் குறையத் தொடங்கியது. குறிப்பாக அணையை ஒட்டியுள்ள பகுதியில் வண்டல் மண் குவிந்ததால், அணையின் நீர்மட்டத்தில் 20 அடி வரை குறைந்தது. இதனால் நீர் தேங்குவது குறையத் தொடங்கியது. அணையின் நீர் மட்டத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் அதிக நீர் தேக்கலாம் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

