
தமிழகத்தில் வரலட்சுமி பூஜை, கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2,000க்கு விற்பனையானது. கரோனாவுக்குப் பிறகு மதுரை மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆக. 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு விழா களைகட்டத் தொடங்கி இருக்கிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக அத்தப்பூ கோலம் போடப்படுவது வழக்கம். இதற்காக ஓசூர், மதுரை, திண்டுக்கல் நிலக்கோட்டை, கோவை, தோவாளை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய மலர்ச் சந்தைகளில் இருந்து அதிக அளவில் பூக்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

