
புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கக்கோரி, நடிகர் விஜய் சேதுபதி கோரியதற்கு முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்து விட்டு, வழக்கம்போல் பரிசீலிப்பதாக குறிப்பிட்டார். இதற்கு காரணம் புதுச்சேரியை கரோனா காலத்தில் திரைத்துறையினர் கண்டுக்கொள்ளாததும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா பரவல் குறைந்ததால், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நூறு பேருடன் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போது, தமிழ், மலையாளம் என, பல்வேறு மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. அதேபோல், தொலைக்காட்சி, விளம்பர படப்பிடிப்புகளும் நடக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

