
சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகரில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் உள்ளிட்டவை, நாளை முதல் 23-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது எனவும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று (ஆக. 07) 91 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

