
நாடு முழுவதும் பாஜகவினர் நடத்தும் யாத்திரையால், கரோனா 3-வது அலை வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் கோவையில் இன்று (ஆக. 17) தொடங்கியது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். மேலும், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இந்த மாநிலக் குழுக் கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டம் நாளை (ஆக.18) நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் நிறைவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

