
அரியலூரில் தனியார் சிமென்ட் ஆலைத் தொழிலாளி உயிரிழந்த நிலையில், இழப்பீடு கோரி உறவினர்கள் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆலத்தியூரில் தனியார் சிமென்ட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் செந்துறை அருகேயுள்ள துளார் கிராமத்தில் உள்ளது. இந்தச் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் பம்ப் ஆப்பரேட்டராக பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணராமன் (45) மற்றும் மணக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைபிள்ளை (50) ஆகியோர் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

