
திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘செயற்கை மணல்’ தயாரிப்பு பல்வேறு இடங்களில் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் வளத்தை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கனிம வளமும் கொள்ளை போகிறது. இதைக் காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஆறுகளில் இருந்து மணல் எடுக்க அரசு தடை விதித்துள்ளது. கட்டுமானப் பணி தேவைகளுக்காக ஒரு சில பகுதிகளில் மட்டும் அரசு மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கியுள்ளது. இருந்தாலும், ஆறுகள் உள்ள மாவட்டங்களில் சட்ட விரோதமாகத் திருட்டு மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆறுகளில் அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு, கடத்தப்படுவதால் தற்போது மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க செயற்கை மணல் தயாரிப்புத் தொழில் சில மாவட்டங்களில் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

