
வரும் காலத்தில் அரசின் திட்ட உதவிகளை பெறுவதற்கும், கல்வி நிலையங்களில் சேர்வதற்கும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று கேட்கப்படலாம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை இன்று(ஆக.2)நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், மருத்துவர்கள், தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

