
பணி ஓய்வுக்குப் பின்பும் ஓய்வெடுக்காமல் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என நினைப்பவர்கள் வரிசையில் உடுமலையைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் 6 ஆண்டுகளுக்கு மேலாக 60 வகையான மரம், செடி, கொடி வகைகளை மாடித் தோட்டத்தில் வளர்த்து பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
உடுமலையில் அரசு தொழிலாளர் நலத்துறையில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் வேலுச்சாமி (66). ஓய்வு பெற்ற பின்பு வீட்டில் முடங்கிக் கிடக்க மனமில்லாத இவர், வீட்டில் பயன்படுத்திய பொருள்களைக் கொண்டு மாடித்தோட்டம் அமைக்கத் தொடங்கினார். அதன் விளைவாக தற்போது பல வகைக் காய்கறி, கீரை வகைகள், பழ வகைகள், முருங்கை, மா, கொய்யா, மாதுளை, சீதா, திராட்சை, பூச்செடிகள் என 60-க்கும் மேற்பட்ட மரம், செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறார். அத்துடன் பாரம்பரிய நாட்டுக் கோழி வகைகளையும் வளர்த்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

