
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஏற்று, முதல் முறையாக அவரது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு நேற்று (ஜூலை 06) மாலை வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

