
முதுமலையில் மரக்கூண்டில் சிறைப்பட்டிருந்த ‘சங்கர்’ யானை இன்று மரக்கூண்டிலிருந்து விடுதலை பெற்று, வெளியே அழைத்து வரப்பட்டது. சுதந்திரக் காற்றைச் சுவாசித்ததும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தந்தை, மகன் உட்பட மூன்று பேரைக் கொன்ற காட்டு யானை சங்கர். வனத்துறையினர் இந்த யானையைப் பிடிக்க முயன்றனர். அப்போது மயக்க ஊசியும் செலுத்தினர். ஆனால், மயக்க ஊசியுடனேயே பிற காட்டு யானைகளுடன் சேர்ந்து, கேரள வனத்துக்குச் சென்று மறைந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக வனத்துறையினருக்குப் போக்குக் காட்டி வந்த காட்டு யானை சங்கர் மீண்டும் நீலகிரி மாவட்ட வனத்துக்குத் திரும்பியதும், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி பிடிபட்டது. பிடிபட்ட நாள் முதல் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் பகுதியில் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

