
இந்தியாவிலேயே முதன்முதலாக கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடும் பணி பென்னாடம் பகுதியில்தான் தொடங்கியுள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழகத்தில் முதலாவதாக கடலூர் மாவட்டம், பென்னாடம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்திடும் பணியை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 03) தொடங்கி வைத்தார்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

