
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 சிறந்த எம்.பி.க்களின் நாடாளுமன்ற உரைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.
ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷனின் 21-ம் ஆண்டு விழா இணையவழியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் சார்பில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் `சன்சத் ரத்னா' விருது பெற்ற எம்.பி.க்களின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய மின் நூல்கள் (இ-புக்) வெளியிடப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

