
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் கிராமப் பஞ்சாயத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய, புதுச்சேரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனத் திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அம்பகரத்தூர் கிராமப் பஞ்சாயத்தில் 11 வார்டுகள் இருந்தன. மறுவரையறையின்போது 8 வார்டுகளாகக் குறைத்ததுடன் தலையாரி தெரு, தலையாரி சந்து, தலையாரி கீழத்தெரு, மதரசா தெரு, புதுமனைத்தெரு, ரைஸ்மில் தெரு, பழைய அம்பகரத்தூர், காலனிபேட், கண்ணாப்பூர், கண்ணாப்பூர் பேட் உள்ளிட்ட பகுதிகளை நல்லம்பல் கிராமப் பஞ்சாயத்தில் இணைத்துவிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

