
12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூலை 22) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
கரோனா 2-வது அலை காரணமாக 2020- 21ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 10, பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

