
தேர்தலில் வென்று ஐம்பது நாட்களுக்குப் பிறகு அமைச்சர்களாகப் பதவியேற்று ஒரு வாரமாகியும் துறைகள் ஒதுக்கீட்டுக்காகப் பொறுப்பேற்றோர் காத்துள்ளனர். முதல்வர் ரங்கசாமி வழக்கம்போல் தொடர் மவுனத்தில் உள்ளார்.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்று 50 நாட்கள் இழுபறிக்குப் பிறகு என்ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த 3, பாஜகவைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் தமிழிசை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து அமைச்சர்கள் கோப்புகளுக்குக் கையெழுத்திட்டுப் பணிகளைத் தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

