
கரூர் நகராட்சி விரைவில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கரூர் மாநகராட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 121 நகராட்சிகளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சிகளில் கரூர் நகராட்சியும் ஒன்று. கடந்த 1874-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கரூர் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது. மக்கள்தொகை பெருக்கம், வருமான உயர்வு காரணமாக 1969-ல் முதல் நிலை, 1983-ல் தேர்வுநிலை, 1988-ல் சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 76,328 பேர் வசித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

