
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த பெரியகுளத்தில் இருந்து அரசின் முறையான அனுமதியின்றி நூற்றுக்கணக்கான லோடு மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்துப் பொதுமக்கள் கூறும்போது, ''உடுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக நீர்நிலைகளில் அரசின் அனுமதியின்றி மண் வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் அதிகாரம் மிக்கவர்களின் தலையீடுகளால் அதிகாரிகளும் நடவடிக்கை ஏதுமின்றி வேடிக்கை பார்த்து வந்தனர். ஆனால், திமுக வந்து ஆட்சி மாறியபோதும் காட்சி மாறாமல் அதே முறைகேடுகள் தொடர்ந்து வருவது வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

