வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும்.
இதன் காரணமாக 14, 15-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய இதரமாவட்டங்கள் (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி), ஈரோடு,தருமபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்