
27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம். இதற்காக சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்களுக்கு emis-போர்ட்டலில் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல், 2021-22ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்குதல் சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

